தஸவ்வுபினதும் ஸூபிகளினதும் அறிவுப் பங்களிப்பும் சமூக நிர்மாணப் பணிகளும்

இஸ்லாமிய வரலாற்றில் கால வளர்ச்சியில் தோன்றிய அகீதா> பிகஹ் போன்ற கலைகள் போன்றே குர்ஆன்> ஸுன்னாவின் அடிப்படையில் தோன்றிய ஒரு கலையாக தஸவ்வு விளங்குகின்றது. அகீதா> இஸ்லாமிய விசுவாசக் கோட்பாட்டோடு தொடர்புடைய ஒரு கலையாகவும்> பிக்ஹ் இஸ்லாமிய சட்டவியலுடன் தொடர்புடைய கலையாகவும் அமைந்தது போன்று> தஸவ்வும் இஸ்லாத்தின் ஆத்மிகக் கோட்பாட்டோடு தொடர்புடைய ஒரு கலையாகும். முதகல்லிமீன்கள்> புகஹாக்கள் போன்றே ஸூபிகளும் இஸ்லாமிய அறிவுப் பாரம்பரியத்திற்கு மகத்தான பங்களிப்புச் செய்துள்ளனர்.

தஸவ்வுப் பற்றி சரியான அறிவும் தெளிவும் இல்லாதவர்கள் அதனை ஒரு துறவறக் கோட்பாடாகவும்> ஸூபிகள் என்போர் உலக வாழ்வைப் பொறுத்தளவில் பற்றற்ற மன நிலையைக் கடைப்பிடித்து சமூக வாழ்விலிருந்து ஒதுங்கி வாழ்வோராகவும் கருதுகின்றனர். சிலர் ஸூபிகள் துறவறக் கோட்பாட்டைப் போதித்து இஸ்லாமிய வரலாற்றின் இயக்க சக்திக்கு எதிராகச் செயல்பட்ட பிற்போக்குவாதிகள் என அவர்களை விமர்சிக்கின்றனர். ஆனால் உண்மையில் தஸவ்பின் வரலாறும்> ஸூபிகளின் ஆளுமையும் பங்களிப்பும் இக்கருத்துக்கு முற்றிலும் முரணாக அமைந்துள்ளது.

தஸவ்வும் மனித உள்ளத்தை அதன் மாசகற்றி தூய்மைப்படுத்துவதை நோக்காகக் கொண்டது. ஷஷதஸ்கியதுந் நப்ஸ்|| என்னும் உள்ளப் பரிசுத்தமே அதன் முக்கிய நோக்கமாகும். இந்த நோக்கம் அனைத்தையும் அடையும் வகையிலேயே அதன் வழி முறைகளும் அமைந்துள்ளன. தொழுகை> நோன்பு போன்ற இஸ்லாமிய வணக்கங்களின் புறரீதியான சட்டங்களை ‘பிகஹ்|| எனனும் சட்டக்கலை விளக்குவது போன்று இந்த வணக்கங்களில் பொதிந்துள்ள உள்ளார்ந்த அம்சங்கள் பற்றி தஸவ்வுப் விளக்குகின்றது. இதனை அறிஞர்கள் பிகஹுல் பாதின் – ‘உள்ளார்ந்த பிகஹ்|| என அழைப்பர். இந்த வகையில் பிகஹுவும் தஸவ்வுபும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றவை.

இஸ்லாத்தின் போதனைகள்> வணக்க வழிபாடுகளின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாக விளங்கியிருப்பது ஒரு விசுவாசியில் ஷஅக்லாக்| என்னும்> உயர்ந்த சான்றாண்மை மிக்க நற்குணங்களை உருவாக்குவதாகும். இத்தகைய நற்குணங்களை உருவாக்கத் தவறும்போது அகீதா என்னும் இஸ்லாமிய விசுவாசக் கோட்பாடும் ஷரீஆ என்னும் இஸ்லாமிய சட்டக் கோப்பும் உயிரற்ற வெறும் சடமாகவே காட்சியளிக்கும். இந்த வகையில் “தஸ்கியதுந் நப்ஸ்|| என்னும் உளத் தூய்மைகளும் ‘அக்லாக்|| என்னும் நற்குணங் களுக்கிடையில் நெருங்கிய தொடர்புள்ளது. ஆத்மீக அனுஷ்;டாணங்கள் மூலம் ஒரு விசுவாசியின் உள்ளத்தின் பாவங்கறை அகன்று தூய்மையடைவதன் மூலமே> அவனில் சான்றான்மை மிக்க நற்குணங்கள் தோற்றமெடுக்கின்றன.

இமாம் இப்னுல் கையும் ஜவ்ஸிய்யா நற்குணத்துக்கும் தஸவ்வுப்புக்குமிடையே உள்ள தொடர்பை பின்வருமாறு அழகாக விளக்குகின்றார்கள்:

“சன்மார்க்கம் என்பது மொத்தத்தில் நற்குணமாகும். எவனில் நற்குணங்கள் அதிகரிக்கின்றனவோ அவனில் சன்மார்க்க உணர்வு மிகச் சக்திவாய்ந்ததாகச் செயல்படும். இதுபோன்றே எவனில் நற்குணம் அதிகரிக்கின்றதோ அவனில் தஸவ்வுபின் பண்பு உயிரோட்;டத்துடன் செயல்படுகின்றது என்பது கருத்தாகும்.||

ஸூபி என்பவா்-; செயலும் இயக்கமற்று> சமூக வாழ்வோடு தொடர்பற்று தனிமையில்>ஏகாந்த நிலையில் துறவுபூண்டு வாழ்பவர் எனக் கருதுவோரும் உளர். தஸவ்வுபின் வரலாறு பற்றி உரிய முறையில் தெரியாதவர்களே இத்தகைய கருத்தைக் கொண்டிருப்பர். ஸூபிகள் வாழ்க்கையில் முழு ஈடுபாட்டுடன் செயல்படுவதும் இயங்குவதும் ‘ஸுஹ்த்| என்னும் பற்றற்ற வாழ்வின் ஓர் அங்கமாகவே கருதுகின்றனர். ஏனெனில் ஸுஹ்த் என்பது அவர்களைப் பொறுத்தளவில் உள்ளத்தின் கீழான உணர்வுகளிலிருந்தும் சடத்தின் ஆதிக்கத்திலிருந்தும் விடுதலை பெறுவதாகும். மாறாக வாழ்க்கையின் விவகாரங்களிலிருந்து ஒதுங்கி> தனித்து> செயலற்று இருப்பதை ஸுஹ்த் குறிக்கவில்லை. ஆரம்ப கால ஸுபிகள் செயலையும் உழைப்பையும் தூண்டினர். இயக்கமும் செயற்பாடுமே அவர்களது வழிமுறையின் முக்கிய பண்புகளாக விளங்கின. இப்ராஹிம் இப்னு அதஹம் என்னும் புகழ்பூத்த ஸுபி அவரது மாணவர் ஷகீக் அல் பல்கியை நோக்கிப் பின்வருமாறு கூறினார்:

‘எங்களைப் பொறுத்தளவில் ஹஜ்ஜையும்> ஜிஹாதையும் விட ஒருவர் ஹலாலான வழியில் ஈட்டிய பணத்தினால் பெற்றுக்கொண்ட இரண்டு ரொட்டித் துண்டுகள் தனது வயிற்றுக்குள் செல்வது பற்றி மிக கரிசனையோடும் அவதானத்துடனும் இருப்பதே மேலானது.

இந்த அடிப்படையிலேயே இப்ராஹிம் இப்னு அதஹம் தன்னைப் பின்பற்றிய தோழர்களுக்கு ஒருதடவை பின்வருமாறு அறிவுரை பகர்ந்தார்கள்:

‘ அனுமதிக்கப்பட்ட வழிகளில் பொருள் தேடுவதும்>அதனையே குடும்பத்திற்காக செலவழிப்பதும்> உங்களது கடமையாகும்.||

பெரும்பான்மை ஸுபிகள் இந்தவகையிலேயே முயற்சியையும்> உழைப்பையும் நோக்கினர். அவர்களுள் ஹத்தாத் (கொல்லர்கள்) > அல் ஹஜ்ஜாம் (இரத்தம் குத்தி எடுப்போர்) > அஸ்-ஸஜ்ஜாஜ் (கண்ணாடி செய்வோர்)> அல்- கஸ்ஸார் (துணிகளை வெள்ளை நிறமாகப் பளிச்சிடச் செய்வோர்) போன்ற தொழில்களைப் பரிந்த ஸூபிகள் பற்றி வரலாறு பதிவு செய்துள்ளது. ஹம்தூன் அல்- கஸ்ஸார் அவரது மாணவர் அப்துல்லாஹ் அல்- ஹஜ்ஜாமை நோக்கிப் பின்வருமாறு கூறினார்: ‘நீர் உமது தொழிலில் தொடர்ந்து நிலைத்திருப்பதும் நீர் அப்துல்லாஹ் அல் ஹஜ்ஜாம் என அழைக்கப்படுவது> அப்துல்லாஹ் அல் – ஆரிப் (அப்துல்லாஹ் இறைஞானம் பெற்றவர்) என அழைக்கப்படுவதை விட மேலானது.

அவர்கள் உழைப்பிற்கும் தொழில் புரிவதற்கும் கொடுத்த முக்கியத்துவம் காரணமாகவே பொருளீட்டுவதில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய ஒழுக்க மாண்புகள் (அதபுல் கஸப்) பற்றியும் பல்வேறு தொழில்களில் ஈடுபடுபவர்களில் அமைந்திருக்க வேண்டிய பண்புகள் பற்றியும் பொருளீட்டுதலுடன் தொடர்புடைய சட்டப் பிரச்சினைகள் பற்றியும் தங்களது நூல்களில் விளக்கியுள்ளார்கள்.

எனவே தஸவ்வுபை சோம்பல்> தேக்கநிலை> சமூக விவகாரங்களிலிருந்து ஒதுங்கி வாழும் மனப்பான்மை> வாழ்க்கைப் போராட்டத்திலிருந்து விடுபட்டு துறவறம் மேற்கொள்ளல் போன்ற பண்புகளோடு இணைத்துப் பேசப்படுவது வரலாற்று உண்மைகளுக்கு முற்றிலும் முரணானதாகும்.

ஸூபிகள் சமூகத்தில் மக்கள் மத்தியில் மிகக் கண்ணியத்தோடு மதிக்கக் காரணமாக அமைந்தது அவர்கள் மக்களோடு இரண்டரக் கலந்து அவர்களை நெறிப்படுத்துவதில் ஈடுபாடு காட்டியமையாகும்.

‘ஸூபிகள் மக்கள் சமூகத்தில் முக்கிய அங்கமாக வாழ்ந்து மக்களுக்கு அவர்கள் விளங்கும் மொழியில் சன்மார்க்கப் போதனைகளை விளக்கினார்கள். சாதாரண பாமர மனிதன் அவர்கள் அளித்த விளக்கத்தை எளிதாகப் புரிந்து அவரது வாழ்க்கையை சீர்படுத்திக் கொண்டான். இதனைத்தான் படித்தவர்கள் மத்தியில் அவர்கள் பெற்ற இடத்தை பாமர மக்கள் மத்தியில் ஸூபிகள் பெற்றுக்கொண்டார்கள்|| என ஸூபிகளின் வரலாறு பற்றி ஆராய்ந்த ஓர் மேற்கத்திய அறிஞர் குறிப்பிடுகிறார்கள்.

ஸூபிகள் மத்தியில் புகழ்பூத்த அறிஞர்கள் காணப்பட்டனர். பல்வேறு இஸ்லாமிய கலைகளிலும் துறைபோகிய அறிஞர்களாக அவர்கள் விளங்கினர். அபுல்காஸிம் இப்ராஹிம் பின் முஹம்மத் அந் நஸ்ராபாதி ஹதீஸ் துறையில் சிறந்த அறிஞராக விளங்கினார். அபூ ஹம்ஸா அல் பக்தாதி ‘இல்முல் கிராதத் துறையில் துறைபோகிய அறிஞராகக் கருதப்பட்டார். உமர் இப்னு உஸ்மான் அல் மக்கி உஸுல் துறையில் புகழ்பெற்று விளங்கினார். ஹம்தூன் அல் கஸ்ஸார் ளாஹிரி மத்ஹப் பிரிவைச் சார்ந்த கட்ட அறிஞராக விளங்கினார். ஷெய்கு அப்துல் காதிர் ஜீலானி ஹம்பலி மத்ஹபைச் சார்ந்த சட்ட அறிஞராக புகழ்பெற்றிருந்தார்கள்.

ஸூபி பெருஞானிகள் பலதுறை சார்ந்த அறிவுத் துறைகளிலும் சிறப்புற்று விளங்கியமை மட்டுமன்றி மக்களுக்கு அறிவுப் போதனை புரிவதிலும்> பண்பாட்டு வளர்ச்சியை வழங்குவதிலும் ஈடுபட்டு அறிவுக்குப் பங்களிப்பு புரிந்தார்கள். மக்களுக்கு அறிவு>ஆன்மீக வழிகாட்டுதலை வழங்குவதில் அல் – முஹாஸபியின் ஷஅர்-ரிஆயா லி ஹுகூக்இல்லாஹ்| அல் மக்கியின் கூதுல் குலூப்> இமாம் அல் கஸ்ஸாலியின் இஹ்யா உலூமுத்தீன்> காதிரிய்யா தரீக்காவின் ஸ்தாபகரான ஷெய்கு அப்துல் காதிர் ஜீலானியின் சொற்பொழிவுகளின் தொகுப்புகளான ஷபதஹுர் ரப்பானீ|> ஷபுதூஹுல் கைப்|> ‘ஜலாஉல் காதிர்| போன்ற நூல்கள் மக்களை ஆத்மீகப் பாதையில் நெறிப்படுத்துவதில் பாரிய செல்வாக்கைச் செலுத்தின.

ஸூபி ஆத்மஞானிகள் அவர்களது காலப் பிரிவில் சமூகச் சீர்கேடுகள்> ஆட்சியாளர்களின் அநீதிகளை எத்தகைய பயமோ தயக்கமோ இன்றி விமர்சித்ததோடு ஆட்சியாளர்களின் சமூக பொருளாதார அநீதிகளுக்கு எதிராகப் போராடினர். ஸஹ்ல் அத் துஸ்தரீ> ஜுனைத் அல் – பக்தாதி ஆகியோர் தமது காலத்துச் சமூக சீர்கேடுகளுக்கு எதிராகப் போராடியதோடு ஆட்சியாளர்களின் அரண்மனையைத் தரிசித்து அவர்கள் சமூக அநிதிகளை அங்கீகரிப்பதையும் கண்டித்தனர். ஹஸனுல் பஸரி அவர்களது காலப் பிரிவில் உமையா கவர்னராக இருந்த இப்னு ஹுபைராவை அவர் மக்களுக்கு எதிராக புரியும் அநீதிகளுக்கு எதிராக மிகக் கடுமையாக கண்டித்ததை வரலாறு பதிவு செய்துளளது. புலைல் பின் இயாழ் நாட்டில் மக்கள் மத்தியில் நீதியை நிலைநாட்டும்படி கலீபா ஹாரூன் ரஷீதை எச்சரித்தார். ஸுனனுன் அல் பிஸ்ரி அப்பாஸிய கலீபா முதவக்கிலின் காலப் பிரிவில் சிறையிலடைக்கப்பட்டார். அவருக்கு சிறைச்சாலையில் உணவு கொண்டுவரப்பட்டது. ‘இது அநியாயக் காரனின் உணவுத் தட்டில் கொண்டுவரப்பட்ட உணவாகும் எனக்கூறி அதனை சாப்பிட மறுத்துவிட்டார்கள். ஷெய்கு அப்துல் காதிர் ஜீலானியின் காலப் பிரிவில் அப்பாஸிய கலீபா அநியாயக் காரனான ஒருவரை மாகாண அதிபதியாக நியமித்தார். அப்தில் காதிர் ஜீலானி மஸ்ஜிதில் குத்பா சொற்பொழிவு நிகழ்த்திக்கொண்டிருந்தபோது அங்கு கலிபா சமூகமளித்திருப்பதைக் கண்டதும்> கலீபாவை நோக்கி நீர் மக்களுக்கு அநீதியும் கொடுமையும் இழைக்கும் ஒருவனை ஆட்சிப் பொறுப்புக்கு நியமித்துள்ளீர். மறுமையில் நீர் இறைவனின் சந்நிதானத்தில் இதற்கு எப்படி பதிலளிப்பீர் எனக் கேட்டபோது கலீபா அதிர்ச்சியடைந்தார். உடனே அந்த மாகாண அதிபதியை பதவியிலிருந்து நீக்கிவிட்டார். இதுபோன்ற என்னற்ற நிகழ்வுகளை வரலாறு பதிவுசெய்துள்ளது. அநீதிக்கும் கொடுமைக்கும் எதிராகக் குரல் கொடுத்த ஸூபிகளின் இச்செயல்பாடு தஸவ்வுபின் வரலாற்றில் ஒரு முக்கிய அங்கமாக உள்ளது.

ஆத்மஞானிகளான ஸூபிகள் மக்கள் மத்தியில் அறிவைப் பரப்புவதிலும்> மக்களோடு இரண்டரக் கலந்து அவர்களது கவலைகள் துயரங்களைப் போக்குவதிலும்>கவலையால் உடைந்து நொறுங்கிய உள்ளங்களுக்கு ஆறுதல் வழங்குவதிலும் பெரும் பங்களிப்புச் செய்தனர். ஆபிரிக்காவில் தரீகா ஸனூஸியா மக்கள் மத்தியில் அறிவைப் பரப்புவதிலும்> இஸ்லாமிய அழைப்புப் பணியிலும் காத்திரமான பங்களிப்பைச் செய்தது ஒருவன் அறிவின்றி இறைவனை அறிய முடியாது என்பது அவர்களது உறுதியான நிலைப்பாடாக விளங்கியது. எனவேதான் ஸூபிகளது ஸாவியாக்கள்>தக்கியாக்களோடு இணைந்து கல்விக் கூடங்கள் நிறுவப்பட்டதை வரலாற்றில் காணமுடிகின்றது.

இந்த வகையில் இலங்கையில் யெமன் ஹல்ரமௌத் பிரதேசங்களிலிருந்து வருகை தந்த ஸூபி மகான்களும் கணிசமான பங்களிப்புச் செய்துள்ளனர். ஷெய்க் இஸ்மயில் இஸ்ஸதீன் யெமானீ, அவரது புதல்வர் ஷெய்க் யெஹ்யா அல்- யெமானீ> ஷெய்க் அப்துல்லாஹ் இப்னு உமர் பாஸீப் அல் யெமானீ ஆகியோர் இத்துறையில் குறிப்பிடத் தக்கோராவர். 1880ம் ஆண்டு இலங்கைகு வருகைதந்த பாதிப் மௌலானா அவர்கள் சிலகாலம் இலங்கையில் தங்கிய பின்னர். யெமன் நாட்டுக்குத் திரும்பினார்கள். 1858ம் ஆண்டு மீண்டும் இலங்கைக்கு வருகைதந்த அவர்கள் 1892ம் ஆண்டு அவர்களது மறைவுவரை ஆத்மிகப் பணிபுரிந்தார்கள். மத்திய மாகாணத்தில் ‘ஹெம்மாத்தகமையில் எள்ள மடுல்போவ கிராமத்தை மையமாக வைத்தே அவர்களது அறிவுப் பணியின் பெரும் பங்கு அமைந்தது. இலங்கையில் அராபிபாஷா> சித்திலெவ்வை ஆகியோரின் கல்வி மறுமலர்ச்சிப் பணிக்கு> எகிப்து அல் அஸஹர் பல்கலைக்கழகப் பட்டதாரியான பாதிப் மௌலானா மிக உறுதுணையாக விளங்கினார்கள். தங்களது வாழ்வின் இறுதிக் கட்டத்தில் கஹட்டோவிட்ட கிராமத்தை வந்தடைந்து>பள்ளிவாசலுக்கு அண்மையில் ஓர் மத்திய தளத்தை அமைத்து மக்களை ஆத்மீகப் பாதையில் நெறிப்படுத்தியதோடு கஹட்டோவிட்ட கிராமத்தில் முதன் முதலாக தமிழ் பாடசாலை ஒன்றை அமைத்து கல்விப் பணிக்குப் பங்களிப்புச் செய்தார்கள்.

வாழ்க்கைப் போராட்டத்தில் சிக்கி கவலையாலும், துக்கத்தாலும் பாதிக்கப்பட்ட உள்ளங்களில் நம்பிக்கையையும் ஆறுதல் அளிக்கும் பணியில் ஈடுபட்ட ஆத்மீக மருத்துவர்களாக ஸூபிகள் வரலாற்றின் எல்லா காலகட்டங்களிலும் விளங்கியுள்ளனர். ஷஷபடைப்பினங்கள் அனைத்தும் அல்லாஹ்வின் குடும்பமாகும் அவனது குடும்பத்திற்கு பயன் நல்குபவர்களே அவனுக்கு மிகவும் விருப்பமானவர்கள் என்ற நபி (ஸல்) அவர்களின் வாக்கிற்கு ஏற்ப அவர்களது வாழ்வும் பணிகளும் அமைந்தன. அவர்களது ஸாவியாக்கள்> தக்கியாக்கள்> கான்காக்கள்   வறுமையின் கோரப் பிடியில் சிக்கி நலிவுற்ற> கவலையாலும் துக்கத்தாலும் மனம் உடைந்த மக்களின் தஞ்சகமாக அமைந்தது. குறிப்பாக இந்திய துணைக்கண்டத்தில் இந்த மரபு பரவலாகக் காணப்பட்டதையும்> முஸ்லிம்கள் மட்டுமன்றி முஸ்லிமல்லாதவர்கள் கூட அமைதியும் நிம்மதியும் தேடி அங்கு வந்ததையும் ஷெய்கு அபுல் ஹஸன் நத்வி அவர்கள் “ரப்பானியா லா ரஹ்மானிய்யா| என்னும் நூலில் மிக விரிவாக விளக்குகின்றார். மேலும் இது தொடர்பான பல சம்பவங்களைக் குறிப்பிடுகிறார். இந்தியாவின் புகழ்பூத்த ஸூபி மகானான ஷெய்கு நிலாமுத்தீன் அவர்களது ஷெய்காக விளங்கியவர் அவரை டில்லிக்கு ஆத்மீகப் பணிக்காக வழியனுப்பும்போது பின்வருமாறு கூறினார்கள் ‘நீர் எங்கும் கிளைபரப்பி நிழல் வழங்கும் ஒரு மரமாக இருப்பீராக. இறைவனின் படைப்பினங்கள் அந்த மரத்தின் கீழ் நிழலும் அமைதியும் பெறட்டும்|| இந்த வகையில் ஸூபிகள் அனைத்து படைப்பினங்களையும் இறைவனின் குடும்பமாக நோக்குகின்ற இஸ்லாத்தின் மனிதாபிமானக் கோட்பாட்டைப் பிரதிநிதித்து வப்படுத்தினார்கள். ஸூபிகளின் இந்த மனித நேயமும்> இறை நம்பிக்கையினால் போசிக்கப்பட்ட ஆத்மீக ஆளுமையின் ஆகர்ஷிப்புமே கிழக்காபிரிக்கா> தென்> தென்கிழக்காசியாவில் மத்திய ஆசியப் பிரதேசங்களிலும் இஸ்லாத்தின் பரம்பலில் முக்கிய பங்கை வகித்ததைப் பேராசிரியர் தோமஸ் ஆர்னல்ட்   “Preaching of Islam” என்னும் தனது நூலில் குறிப்பிடுகிறார்.

தங்களது காலப்பிரிவில் வாழ்ந்த ஆட்சியாளர்களின் அநீதிகளையும் ஷரீஆவிற்கும் இஸ்லாமிய சமூக பொருளாதார நீதிக்கும் முறனாக செயற்பட்ட தன்மைகளையும் மிகவும் துணிச்சலோடு விமர்சித்த ஆத்ம ஞானிகள் வரிசையில் இமாம் கஸ்ஸாலியும்> அப்துல் காதர் ஜீலானியும் சிறப்பிடம் பெருகிறார்கள். தங்களது காலப்பிரிவின் ஆட்சியாளர்களை இறைவன் விதித்துள்ள வரம்புகளை மீறி செயற்படுகின்ற அநீதியாளர்களாக இமாம் கஸ்ஸாலி கருதியதோடு> அவர்கள் ஷரீஆவின் நெறிமுறைகளை நோக்கி திரும்பாத சன்மார்க்க அறிஞர்கள் அத்தகைய ஆட்சியாளர்களுடன் உறவு பூணுவதை ‘ஹராம்’ என கருதினார்கள். மக்களுக்கு உரிமையான செல்வத்தை அநியாயமான முறையில் சூறையாடி அதனை தவறான வழியில் இந்த ஆட்சியாளர்கள் பயன்படுத்துவதை அவர்களது அநீதிக்கு மிக தெளிவான ஆதாரம் என்றும் சன்மார்க்க அறிஞர்கள் இத்தகைய ஆட்சியாளர்கள் குறித்து அவதானத்துடன் செயற்hட வேண்டும். அவர்களிடமிருந்து எத்தகைய பரிசினையும் பெறக் கூடாது எனவும் இமாம் அவர்கள் எச்சறித்தார்கள்.

அநீதியான ஆட்சியாளர்கள் அவர்கள் தவறான வழியில் அபகரித்த பணத்தினால் கட்டிய சந்தையில் வியாபாரம் புரிவதை கூட ஹராம் என புகழ் பூத்த ஸூபியான இமாம் கஸ்ஸாலி அவர்கள் கூறியமையானது எத்துனை துணிச்சலுடன் அவர்கள் சமூக அநீதிகளுக்கு எதிராக குரல் எழுப்பினார்கள் என்பதை காட்டுகிறது.

அப்துல் காதர் ஜீலானி அவர்கள் ஆட்சியாளர்களின் அதிகார துஷ்பிரயோகம்> ஆட்சியில் நடைபெரும் ஊழல்கள் பற்றியும்> செல்வந்தர்களின் சுக போக வாழ்வு> வறியவர்கள்> ஏழைகளின் அவல நிலை பற்றிய அக்கரையின்மை பற்றி ‘ புதூஹுல் கைப்’>’பத்ஹுர் றப்பானி போன்ற அவர்களது நூலகள்; குறித்து காட்டுகின்றன.

சிலுவை யுத்தங்களை தொடர்ந்தும்> முஸ்லிம் சமூகத்தில் பாதினிக்கள் தோற்றுவித்த குழப்ப நிலையை தொடர்ந்தும் இமாம் கஸ்ஸாலியின் காலப்பிரிவில் வறுமையும் ஏழ்மையும் சமூகத்தை பெருமளவு பாதித்தது.

இத்தகைய சூழலில் செல்வந்தர்களின் ஆடம்பர வாழ்வையும்> பிரபல்யம்> புகழ் ஆகியவற்றை நோக்காக கொண்டு அவர்களால் செய்யப்படும் வீண்விரயத்தை இமாம் அவர்கள் மிக வண்மையாக கண்டித்தார்கள். தங்களது சூழலில் வறுமையில் வாழும் ஏழைகள் இருக்க அவர்களது பசியை போக்கவும்>வறுமை நிலைக்கு தமது செல்வத்தை செலவளழப்பதற்கும் பதிலாக மஸ்ஜித்களை கட்டுவதிலும்> அவற்றை அலங்கரிப்பதிலும்> பல முறை ஹஜ்ஜிக்காகவும் எம்ராவுக்காகவும் செல்வதற்கு தங்களது செல்வத்தை பயன்படுத்தும் வசதி படைத்தவர்களை இமாம் அவர்கள் கடுமையாக விமர்சிக்கிறார்கள்.

உசாத்துணைகள்

  1. றப்பானியா லா றஹ்பானியா
  2. மதாரிஜுஸ் ஸாலிகீன் 2, 307
  3. அபூ நுகைப், ஹில்யதுல் அவ்லியா 7, 369
  4. லும்ஆ, 260
  5. அப்துர் ரஹ்மான் பதவி, தாரிகுத் தஸவ்வுப் பில் இஸ்லாம். குவைத் 1981, 237
  6. அல் கலாபாசி, 102
  7. scholars, sairts and sufis p. 308,306
  8. ஷாபிஈ புஸூலத் தஸவ்வுப், 146
  9. அபூ நுஐம் அல் இஸ்பஹானி, ஹில்யதுல் அவ்லியா
  10. இப்னுல் ஜவ்சி மிர்ஆத ஸமன், 265

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *