இமாம் கஸ்ஸாலியின் கல்விச் சிந்தனை

கிரேக்க காலம் முதல் நவீன காலம் வரை பலவகைப்பட்ட கல்விக் கோட்பாடுகள் தோன்றியுள்ளதை கல்விச் சிந்தனையின் வரலாறு பற்றி ஆராயும் எவரும் காணமுடிகின்றது. இத்துறையில் கிரேக்கத் தத்துவஞானி  பிளேட்டோ முதல் நவீன காலப் பிரிவின் பொ்டன்‌ ரஸ்ஸல் வரை  பல கல்வித்தத்துவங்கள், கோட்பாடுகள் தோன்றியுள்ளன. இத்துறையில் முஸ்லிம் சிந்தனையாளர்கள் மற்றும் தத்துவஞானிகள் மிகப் பாரிய பங்களிப்பைச் செய்துள்ளனர். அறிவின் மூலாதாரங்கள், கல்வியின் நோக்கம், இலட்சியம், மனித ஆளுமையின் வளர்ச்சியில் கல்வியின் பங்கு,கலைகளின் பிரிவுகள், வகைப்பாடுகள், கல்விப் போதனையில் ஆசிரியர்கள் பங்கு, கல்வியைப் பெறும் மாணவர்களில் அமைந்திருக்க வேண்டிய ஒழுக்க மாண்புகள் ஆகியன பற்றிய முஸ்லிம் சிந்தனையாளர்களின் பங்களிப்புகள் போதிய அளவு அவதானத்தைப் பெறவில்லை. மிக அண்மைக் காலமாகவே இத்துறையில் ஆர்வமும், கவனமும் செலுத்தப்படுவதை நாம் காணமுடிகின்றது.

 கல்விக் கோட்பாடு,குறிப்பாகக் கல்வியின் வகைப்பாடு ஆகிய துறைகளில்  அல்- பாராபி(ஹி- 339- கி.பி 950), இப்னு ஸீனா(ஹி 428- கி.பி1037), இமாம் அல் கஸ்ஸாலி(ஹி 505- கி.பி 1115), இப்னு ரு‘்த் (ஹி 595 கி.பி -1173), இப்னு கல்தூன் (ஹி 808- கி.பி 1401) ஆகியோர் மிக கணிசமான பங்களிப்பைச் செய்துள்ளனா.்(1) இவர்களுள் கல்வித்தத்துவம், கல்வியின் வகைப்பாடுகள் பற்றிய துறைகளுக்கு மிகச் சிறப்பான ஒரு பங்களிப்பைச் செய்தவராக இமாம் கஸ்ஸாலி (றஹ்) அவர்கள் கருதப்படுகின்றரர்கள்.

கல்வியின் பிரிவுகள், வகைப்பாடுகள் பற்றிய துறைகளுக்கு மிக காத்திரமான பங்களிப்பைச் செய்தவராக  இமாம் கஸ்ஸாலி (றஹ்) கருதப்படுகின்றரர்கள்.

ஒரு கலைக்களஞ்சியம் எனக் கருதத்தக்க இமாம் கஸ்ஸாலி (றஹ்) அவர்களது  இஹ்யா உலூமித்தீன் என்னும் முக்கிய நூலிலும்   அவரது ஏனைய ஆக்கங்களான  மிஃயாருல் இல்ம்,  அல்-முன்கிஸ் மினள் ளழால், ‘அய்யுஹல் வலத்’ போன்ற நூல்களிலும் அவர்களது  கல்விச் சிந்தனைகள்  விளக்கப்பட்டுள்ளன. இமாமவர்கள் அறிவின் மூலாதாரங்கள்(Lpisitmology) கலைகளின் வகைப்பாடுகள், கல்வியைப் புகட்டுவதில் ஆசிரியர்களது பங்கு, மாணவர்களிடம் அமைந்திருக்க வேண்டிய ஒழுக்க மாண்புகள் பற்றி மிக விரிவாக ஆராய்ந்துள்ளராகள்‌.

கல்விச் சித்தாந்தத்தில் அறிவின் மூலாதாரங்கள் பற்றிய ஆய்வு மிக அடிப்படையான தாகும். பொதுவாக மனிதன்  அவனைச் சூழவுள்ள பௌதீக உலகைப் பற்றிய அறிவைப் பெறுவதற்கு பின்வரும் மூலாதாரங்கள் துணைபுரிகின்றன:-

  1. புலன்கள்
  2. பகுத்தறிவு-( இது புலன்கள் மூலம் பெறப்படும் அறிவைத் தர்க்கரீதியாகத் தொகுத்து ஒழுங்குபடுத்தத் துணைபுரிகின்றது.)
  3. உள்ளுணர்வு (Intention) (சிலபோது மனிதனில் அவனது பகுத்தறிவைத் தாண்டிய நிலையில் இது திடீரென தோற்றமெடுக்கின்றது.)

 முஸ்லிம் சிந்தனையாளர்கள் இந்த மூன்று மூலாதாரங்களையும் தவிர்ந்த வஹீ என்னும் இறைதூது, கஷ்ப் என்னும் ஆத்மீக பரிபக்குவநிலையில் பெறப்படும் ஆத்மீக உள்ளுணர்வு ஆகிய இரண்டையும் உள்ளடக்கு கின்றனர். இவற்றுள் வஹீ எனும் இறைதூது நபிமரர்களுக்கு மட்டும் இறைவனின் புறத்தால் வழங்கப்படுகின்றது. இது மனித அறிவின் மூலாதாரங்கள் அனைத்திலும்‌ உயர்ந்த படித்தரத்தில் உள்ளது.(2) இந்த இறைதூதின் அடிப்படையிலேயே  அல் உலூமு‘ஷ‘ரஇய்யா என்னும் சன்மரர்க்கக் கலைகள் நிறுவப்பட்டுள்ளன. அல்உலூமு‘ஷ‘ரஇய்யா தவிர்ந்த, அக்ல்‌ என்னும் பகுத்தறிவின் அடிப்படையில் நிறுவப்பட்டுள்ள கலைகள் அனைத்தும்  அல்- உலூமுல் அக்லிய்யா எனப்படுகின்றன. கணிதம், பௌதீகம், இயற்கை விஞ்ஞானம் ஆகிய கலைகள் இப்பிரிவில் அடங்குகின்றன.

       இமாம் கஸ்ஸாலி (றஹ்)அவர்கள் அறிவின் மூலாதாரங்களை அடிப்படையாக வைத்து கலைகளை இரு பெரும் பிரிவுகளாகப் பிரித்து நோக்குகின்றரர்கள்.

  1. அல்- உலூமு‘ஷ‘ரஇய்யா- ‘ரிஆ சரர்ந்த சன்மரர்க்கக் கலைகள்‌. தப்ஸீர், ஹதீஸ், பிக்ஹ் போன்ற கலைகளை அவர்கள் இப்பிரிவில் உள்ளடக்குகின்றரர்கள்.
  2. உலூம் கைர ஷரஇய்யா- ரிஆ சாராத கலைகள். இக்கலைகளின் மூலாதாரங்களாக கணிதம், மருத்துவம், தத்துவம் போன்ற கலைகள் உள்ளன. (இஹ்யா- 26)

                இவ்வாறு அறிவின் மூலாதாரங்களை அடிப்படையாக வைத்து கலைகளை இரு பெரும் பிரிவுகளாக வகைப்படுத்திய இமாமவர்கள் கலைகளின்  சமூகச் செயல்பாட்டின்(Social function) அடிப்படையில் அறிவைப் பின்வருமாறு இரு பிரிவுகளாக வகைப்படுத்துகின்றரர்கள்.

  1. புகழத்தக்க கலைகள் (மஹ்மூத்) இப்பிரிவில் வாழ்க்கையின் நிலைபேற்றிற்கு அவசியமான, பயனுள்ள கலைகளான மருத்துவம், கணிதம்  என்பன அடங்குகின்றன.
  2. கண்டிக்கத்தக்கவைகளில்(மஸ்மூம்): தனி மனிதனின், சமூகத்தின் நலன்களுக்கு பாதகமான கலைகளான சூனியம், மாந்திரீகம், சோதிடம் போன்ற கலைகள் அடங்குகின்றன.(3)

     அறிவு என்பது பொதுவில் மனிதனுக்கும் சமூகத்துக்கும் பயன்பாடுடையாதாகவும் இருப்பதால் அது எப்பொழுதும் எந்நிலையிலும் போற்றத்தக்க தாகவே அமையும். இப்படியிருக்க ஏன் சில கலைகள் கண்டிக்கத்தக்கதாக அமைகின்றன என்றவினாவை அவர்கள் எழுப்புகின்றரர்கள். அறிவு என்பது இரண்டு காரணங்களை அடிப்படையாக வைத்து கண்டிக்கத்தக்கதாக அமையும் என அவர்கள் கருதுகின்றரர்கள். அறிவு என்பது அதனளவில் கண்டிக்கத்தக்கதாக அமையாது. ஆனால, சிலபோது சமூகத்தில் சில கலைகள் வகிக்கும் நிலை, சமூகத்தில் அவற்றின் செயல்பாடுகள் காரணமாக கண்டிக்கத்தக்கவையாக  விளங்குகின்றன.

பொதுவாக மூன்று காரணிகளால் அவை கண்டிக்கத்தக்கவையாகக் கொள்ளப்படலாம். தனி மனிதர்களுக்கு அவற்றினால் விளையும் தீமைகள், அவற்றின் சமூகப் பயனின்மை, அல்லது பொது நன்மைக்கு அவை துணைபுரியாமை, அறிவு ரீதியாக நோக்குமிடத்து அவை போலிக் கலைகளாக அமைவது.

கண்டிக்கத்தக்க கலைகள் பற்றிய அவர்களது  இக்கோட்பாட்டை பின்வருமாறு இரு பிரிவுகளாக விளக்குகிறரர்கள்:-

  1. அக்கலைகளைக் கற்றவர்களுக்கோ அல்லது பிறருக்கோ தீமைபயப்பவை: உதாரணமாக சூனியம்,மாந்திரீகம் போன்றவை.
  2. சமுகத்தில் பெரும்பாலோருக்கு தீமை விளைவிக்கும் கலைகளாகவும், உண்மையின் அடிப்படையில் அமையாத போலிக் கலைகளாகவும் விளங்குதல். வெறுமனே ஊகங்களின் அடிப்படையில் அமைந்துள்ள சோதிடங்கள் இதற்கு சிறந்த உதாரணமாகும்.

     இமாமவர்களின் கலைகளின் வகைப்பாடு பற்றிய விமர்சன நோக்கில் அவர்களது காலப்பிரிவில் சமூகச் செயல்பாடு மிக்க ஒரு கலை யாக விளங்கிய தத்துவஞானம் பற்றிய அவர்களது கருத்துக்களை நோக்கும் தத்துவஞானிகள் மூன்று முக்கிய பிரிவினர்களாகக்  காணப்பட்டனர்.

  1. சடவாதிகள் (தஹ்ரிய்யூன்) இவர்கள் இறைவனை மறுத்து அது படைக்கப்படவில்லை, நித்தியமானது- அதாவது ஆரம்பமும், முடிவுமற்றது என்ற கருத்தைக் கொண்டிருந்தனர்.
  2. இயற்கைவாதிகள் (தபீஈய்யூன்) இயற்கையில் காணப்படும் ஒழுங்கு, சீரமைப்பு, அற்புதம் பற்றி அதிகம் பேசுவதொடு இப்பிரபஞ்சத் தைப்படைத்த சிருஷ்டிகர்த்தா ஒருவன் உள்ளான் என்பதையும் ஏற்றுக்கொள்கின்றனர். ஆனால, மறுமையில் உயிர்த்தெழுதலையும், நியாயத் தீர்ப்புநாளையும் மறுக்கின்றனர். பாவ உணர்வு பற்றிய அச்சமோ, பயமோ அற்று மனோ இச்சைக்கு வழிப்பட்டு செயற்படுகின்றனர்.
  3. இறைவிசுவாசம் படைத்தவர்கள்: (இலாஹிய்யூன்) கிரேக்க தத்துவஞானிகளான சோக்கிறடீஸ், பிளேட்டோ, அரிஸ்டோடில் ஆகியோர் சடவாதிகளையும், இயற்கை வாதிகளையும் விமர்சித்ததோடு இறைவனின் இருப்பை ஏற்றுக்கொண்டனர். இறைவனை எத்தகைய பண்புகளுமற்ற வெறும் சக்தியாகவே அவர்கள் ஏற்றுக்கொண்டனர். பிரபஞ்சத்தின் இறைவனை பிரபஞ்சத்தின் ஆரம்பத்தில் இயக்கியவனாக- (அல் முஹர்ரிகுல் அவ்வல்)் அவர்கள் கருதினர்.(4)

கிரேக்கத் தத்துவஞானியான அரிஸ்டோட்டிலின் தத்துவமே அக்காலப் பிரிவில் முஸ்லிம் உலகில் மிகச் செல்வாக்குப் பெற்றது.  அவரது தத்துவக் கருத்துக்களால் கவரப்பட்டு அவரது நூல்களுக்கு விரிவுரைகள் எழுதிய அல்- பாராபி, இப்னு ஸீனா ஆகியோரின் கருத்துக்களை இமாம் கஸ்ஸாலி மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தியுள்ளரர்கள்.

  1. குப்ர் என்னும் இறை நிராகரிப்பிற்கு இட்டுச் செல்லும் கருத்துக்கள்.
  2. இஸ்லாத்தில் புதிதாக அறிமுகப்படுத் தப்பட்ட (பித்அத்) பாரம்பரிய கோட்பாடு கொண்டு முரணானவை எனக் கருதத்தக்கவை.
  3. அங்கீகரித்து ஏற்றுக்கொள்ளத்தக்கவை.

இமாம் கஸ்ஸாலியின் காலப்பிரிவில் தத்துவஞானம் பல பிரிவுகளைக் கொண்டிருந்தது. இன்று அந்த ஒவ்வொரு பிரிவும் தனிப்பட்ட கலைகளாக வளர்ச்சியடைந்துள்ளன. உதாரணமாக கணிதம், பௌதீகம், தர்க்கம் ஆகியன  ஏட்டுக் கல்வியியல், அரசியல் ஆகியன தத்துவஞானத் தின் அங்கங்களாக விளங்கின. அவர்களது  அல்- முன்கிஸ் மினள் ளழால் என்னும் நூலில் தத்துவ ஞானத்தின் பிரிவுகளாக விளங்கிய இக்கலைகள் பற்றியும் அவை தொடர்பான சன்மரர்க்கத்தின் நிலைப்பாடு பற்றியும் மிகத் தௌிவாக விளக்கி யுள்ளரர்கள்.(5)

 கணிதத்தை (அர்-ரியாளா) பொறுத்த வரையில் அது மனித வாழ்வின் நிலைப்பாட்டிற்கு  அவசியமான பல விடயங்களை உள்ளடக்கி யுள்ளது. எனவே அது கண்டிக்கத்தக்க கலையாக, சன்மரர்க்கத்திற்கு முரணான ஒரு கலையாக, காணப்படவில்லை என அவர்கள் குறிப்பிடுகின் றரர்கள்‌. பௌதீகக் கலையானது(இல்முத்தபீஆத்) வானங்கள், நட்சத்திரங்கள், கோளங்கள், மிருகங் கள், தாவரங்கள் பற்றி  ஆராய்கிறது. எனவே இக்கலையும் ஏற்றுக்கொள்ளத்‌தக்கதேயாகும் என அவர்கள் குறிப்பிடுகிறரர்கள். தத்துவத்துடன் தொடர்புடைய கலையான இலாஹிய்யாத்                        என்னும் கலையைப் பொறுத்தவரையில்  சன்மரர்க்கத்திற்கு முரணான கருத்துக்கள் பல காணப்படுகின்றன எனக் குறிப்பிடும் அவர்கள் தனது  தஹாபதுல் பலாஸிபா என்னும் நூலில் தத்துவத்துறையில் இருபது தவறுகளை சுட்டிக் காட்டி மிக அறிவுபூர்வமாகவும், தர்க்கரீதியாகவும் தத்துவஞானிகளது கருத்துக்களை விமர்சிக்கின் றரர்கள்.

 இவர்கள் தத்துவஞானத்தின் தீவிர பகுத்தறிவுப் போக்கை விமர்சித்ததால் அவர்கள்  பகுத்தறிவுச் சிந்தனைக்கு(அக்ல்) எதிரானவர்கள் என்றும், இஸ்லாமிய சிந்தனையின் ஓட்டத்தையும், இயக்க சக்தியையும் தடுத்து நிறுத்தியவர்க ளென்றும், இவர்களது இந்த செயல்பாடு இஸ்லாமிய அறிவியல் பாரம்பரியத்தை தடைசெய்தது என்றும் சிலர் விமர்சிக்கின்றனர். சில கீழைத்தேயவாதிகள் முன்வைத்த இந்தக் கருத்தினை முஸ்லிம் அல்லாதவர்கள் சிலரும் கொண்டுள்ளனர்.             தஹாபதுல் பலாஸிபா என்னும் அவர்களது நூலில் பகுத்தறிவை விட (அக்ல்) விசுவாசத்தை (ஈமான்) சிறப்பித்துப் பேசியிருப்பதாக இவர்கள் கருதுகின்றனர். ஆனால்  இமாம்களின் கருத்துக் களை உரிய முறையில் விளங்கியவர்கள் இஸ்லாத் தில் ஈமானுக்கும், அக்லுக்கும் இடையில் எத்தகைய முரண்பாடும் காணப்படுவதில்லை என்ற கருத்தை மிக அழுத்தமாக வலியுறுத்துவதை  கண்டுகொள்வர். இமாமவர்கள்  மீஸானுல் அமல் என்னும் நூலில் உண்மையையும் சத்தியத்தையும் ஆழமான பரர்வை, சுதந்திரமான சிந்தனையின் அடிப்படையில் தேடும்படியும், பிறரை குருட்டுத்தன மாகப் பின்பற்றுவதை தவிர்க்கும்படியும் கூறுகின்றரர்கள்.  (மீஸான்: 4,9)

  மீஸானில் அவர்கள் குறிப்பிடும் ஒரு கருத்து அவர்களது அறிவுக் கோட்டையில் சுதந்திரமான சிந்தனை வகிக்கும் முக்கிய இடத்தை எமக்கு எடுத்துக் காட்டுகின்றது.  பல கொள்கைகள் சரர்ந்தபிரிவினர் இன்று காணப்படுகின்றனர்.  இப்பிரிவு களில் உனது கவனத்தை செலுத்துவதைத் தவிர்த் துக்கொள். உனது சுதந்திரமான பரர்வையில் சத்தியத்தை, உண்மையை தேடுவாயாக. உனக்கு வழிகாட்டும்  ஒரு தலைவனைக் குறுட்டுத்தனமாகப் பின்பற்ற வேண்டாம். உன்னைச் சுற்றி உனது தலைவனைப் போன்று ஆயிரம் தலைவர்கள் உள்ளனர். அவர்கள் உன்னை நேரான வழியிலிருந்து திசைதிருப்பி அழிவுக்கு இட்டுச்செல்வர். இறுதியில் உனது தலைவர் உனக்கு இழைத்த துரோகத்தை நீ அறிந்து கொள்வாய். எனவே சுதந்திரமான சிந்தனையிலே மீட்சி உள்ளது. எதனையும் விசாரணை உள்ளத்தோடு நோக்குவாயாக, எதனையும் உடனே ஏற்றுக்கொள்ளாமல் ஆரம்பத்தில் சந்தேகத்துடன் நோக்குவாயாக. எவன் இவ்வாறு சத்தியத்தின் தேடலை சந்தேகத்தின் அடிப்படை யில் தேடவில்லையோ அவன் அதனைக் கண்டு கொள்ள மாட்டான். எவன் இவ்வாறு விசாரனையின் அடிப்படையில் சத்தியத்தைக் கண்டுகொள்ளவில் லையோ அவன் வழிகேட்டில்  குருடன் போன்று தட்டுத்தடுமாறுவான்.(6)

எனவே, இமாம் கஸ்ஸாலியின் கல்விச் சிந்தனை குருட்டுத்தனமாக  ஒன்றைப் பின்பற்றுவதை கண்டிப்பதோடு சுதந்திரமான சிந்தனையை வலியுறுத்துகின்றது.  ’’சத்தியமும் உண்மையுமே முக்கியமானது அதனை எவர் கூறுகின்றரர் என்பது அன்று’’, என இமாம் அவர்கள் குறிப்பிடுகின்றரர்கள்.

உசாத்துணைகள்

  1. Seyyed u;usaNy Nasr

    – Science and Civilization iN Islam

  1. எம்..ஏ.எம். சுக்ரி, மதமும் அறிவியலும், அல் கலம் பதிப்பகம், பேருவலை, 1994. பக் 37-53
  2. அல் கஸ்ஸாலி, இஹ்யா உலுமுத்தீன், பெய்ரூத்,1992.
  3. Manarrat u;usiaN Zubeir, Aristotle and Al Ghazail, Deliu, 1992, pp 6-22
  4. Al Munkiz minal dalal, (Eng. Transition Montgomery, The  Faith and practice of Al  Ghazail, London,1953, pp 21-40
  5. யூசுப் அல் கர்ளாவி அல் இமாம் அல் கஸ்ஸாலி பைன மாதிஹீஹி வ நாகிதீஹி(அறபு), பெய்ரூத் ,1994, ப.-40

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *